Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடும்ப அரசியல் நாட்டிற்கு நல்லதல்ல: தம்பிதுரை

பிப்ரவரி 23, 2019 10:41

மணப்பாறை: குடும்ப அரசியல் கட்சி நடத்துபவர்கள் வெற்றி பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல என்பதற்காகத்தான் அ.தி.மு.க. உருவாக்கப்பட்டது என தம்பிதுரை கூறினார். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியப் பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பி துரை, ரத்தினவேல் எம்.பி., மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். பின்னர் கன்னிவடுகப்பட்டியில் மு.தம்பிதுரை எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:- 

ஒவ்வொரு கட்சிகளுக்கும் என தனிக்கொள்கை இருக்கின்றது. தேர்தல் கூட்டணிக்காகத்தான் சில கட்சிகள் ஒன்று சேர்வார்கள். தேர்தல் வரும் போது கூட்டணி அமைப்பது வழக்கம். அண்ணா, ராஜாஜியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தார் என்பது நாம் அறிந்ததே. 

நாங்கள் இந்த கூட்டணி அமைத்ததற்கு காரணம் தி.மு.க.-காங்கிரஸ் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகத்தான். குடும்ப அரசியல் கட்சி நடத்துபவர்கள் வெற்றி பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல என்பதற்காகத்தான் அ.தி.மு.க. உருவாக்கப்பட்டது. 

2004-ல் பா.ஜ.க., 2009ல்பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தோம். அதுபோலத்தான் காலத்திற்கேற்ப கூட்டணி மாறும். நம் இனத்தையே அழித்த காங்கிரஸ்- தி.மு.க. வரக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். 

தமிழக அரசை மத்திய அரசு வஞ்சித்தது உண்மை தான். இவ்வளவு காலம் எதிர்க்கட்சியாக இருந்ததால் தான் தமிழகத்திற்கான திட்டங்கள் பெற முடியாமல் இருந்ததாக தலைமை கருதுகிறது.  மீண்டும் மோடி ஆட்சி தான் வர இருக்கின்றது. இவ்வாறு அவர் பேசினார். 

தலைப்புச்செய்திகள்